மகாபாரதம் கதையை எழுதியது யார் தெரியுமா ?
மகாபாரதம் கதையை எழுதியது யார் :
பராசர மகரிஷியுடைய மகன் தான் வியாச பகவான். அவர் தான் வேதத்தைத் தொகுத்துக் கொடுத்தவர். இவர் பெரும் புகழ் பெற்றவர்.
பாரதத்தை அவர் மனதில் ஒரு காவியமாக அமைத்து வைத்திருந்தார். அதை எப்படி உலகத்துக்கு தெரிவிப்பது என்று சிந்தித்தார்.
பிரம்மதேவரை நினைத்து கடுந்தவத்தை மேற்கொண்டார். வியாசரின் தவத்தைக் கண்டு பிரம்மதேவர் மகிழ்ச்சியடைந்து அவர் முன் வந்தார். வியாசர் பிரம்மதேவரைப் பார்த்து வணங்கி விட்டு,
" பகவானே ஒரு அற்புதமான நூல் என் மனதில் வைத்திருக்கிறேன். அதை எழுதுவதற்கு இந்த உலகில் யாரும் இல்லையா " என்று கேட்டார்.
அதற்கு பிரம்மதேவர் சொன்னார், "மகரிஷியே உங்கள் நூலை எழுதுவதற்கு நீங்கள் கணபதியை நினைத்து தவம் இருங்கள்" என்று கூறி விட்டு பிரம்மதேவர் மறைந்தார்.
வியாச பகவானும் கணபதியைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அதை கண்டு மனம் மகிழ்ந்து கணபதி அவர் முன் தோன்றினார். உடனே வியாசர் அவரை வணங்கி விட்டு முறைப்படி பூஜை செய்தார்.
" கணநாதரே ! பாரதத்தை நான் சொல்லச் சொல்ல நீங்கள் எழுத வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு கணபதி, "சரி , அப்படியே செய்கிறேன். ஆனால் நான் எழுதும் போது என்னுடைய எழுதுகோல் நிக்காது, நீங்கள் நிக்காமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால் தான் நான் உனக்காக எழுத முடியும்" , என்றார்.
இதைக் கேட்ட வியாசர் , மிக கடுமையான நிபந்தனையாக இருக்கிறது என்று நினைத்தார். பின் அதற்கு சரி என்று கூறி விட்டு, இவரும் ஒரு நிபந்தனை வைத்தார், " பொருளை அறிந்து கொண்டு நீங்கள் எழுதிக் கொண்டு போக வேண்டும்", என்றார்.
கணபதி சிரித்துக் கொண்டே அதற்கு சரி என்றார். வியாசர் பாரதம் பாட ஆரம்பித்தார். ஆங்காங்கே பொருள் புரியாமல் விநாயகர் சிந்தித்து கொண்டு இருந்தார், அந்த நேரத்தில் வியாசர் அடுத்து என்ன பாட வேண்டும் என்று மனதில் தயார் செய்து கொண்டார்.
இவ்வாறு பாரதம் வியாசரால் பாடப் பட்டு கணபதி எழுதினார். அந்த பாரதம் பெயர் தான் "மகாபாரதம்".
அந்தக் காலத்தில் அச்சுக் கிடையாது. கல்வி கற்றவருடைய ஞாபக சக்தியே நூல்களுக்கு ஆலயமாக இருந்தது. வியாசர் எழுதி வந்த பார்த்ததை முதலில் அவருடைய மகன் சுகமுனிவருக்குச் சொன்னார். பிறகு அவர் சிஷ்யர்களுக்கு சொன்னார். இப்படியே நம் உலகத்துக்கு தெரியப்பட்டது.
அருமை
ReplyDelete