Posts

Showing posts from November, 2018

மகாபாரதம் கதையை எழுதியது யார் தெரியுமா ?

Image
மகாபாரதம் கதையை எழுதியது யார் :                   பராசர மகரிஷியுடைய மகன் தான் வியாச பகவான். அவர் தான் வேதத்தைத் தொகுத்துக் கொடுத்தவர். இவர் பெரும் புகழ் பெற்றவர்.          பாரதத்தை அவர் மனதில் ஒரு காவியமாக அமைத்து வைத்திருந்தார்.  அதை எப்படி உலகத்துக்கு தெரிவிப்பது என்று சிந்தித்தார்.           பிரம்மதேவரை நினைத்து கடுந்தவத்தை மேற்கொண்டார். வியாசரின் தவத்தைக் கண்டு பிரம்மதேவர் மகிழ்ச்சியடைந்து அவர் முன் வந்தார். வியாசர் பிரம்மதேவரைப் பார்த்து வணங்கி விட்டு,  " பகவானே ஒரு அற்புதமான நூல் என் மனதில் வைத்திருக்கிறேன். அதை எழுதுவதற்கு இந்த உலகில் யாரும் இல்லையா " என்று கேட்டார்.  அதற்கு பிரம்மதேவர் சொன்னார், "மகரிஷியே உங்கள் நூலை எழுதுவதற்கு நீங்கள் கணபதியை நினைத்து தவம் இருங்கள்" என்று கூறி விட்டு பிரம்மதேவர் மறைந்தார்.  வியாச பகவானும் கணபதியைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அதை கண்டு மனம் மகிழ்ந்து கணபதி அவர் முன் தோன்றினார்.  உடனே வியாசர் அவரை...